காமாலை முதல் இரத்த சோகை… ஆல் இன் ஒன்னாக திகழும் கீழாநெல்லி!!!

Author: Hemalatha Ramkumar
15 April 2023, 2:59 pm
Quick Share

நாம் அன்றாடம் நடந்து செல்லக்கூடிய பாதைகளில் ஏராளமான தாவரங்கள் வளர்ந்திருப்பதை நாம் கண்டும் காணாமலும் சென்றிருப்போம். ஆனால் ஒரு நாள் கூட அவை என்ன தாவரங்கள் என்பதை நாம் கவனித்திருக்க மாட்டோம். பராமரிப்பின் அடிப்படையில் எந்த முயற்சியும் ஆதரவும் இல்லாமல் வளர்ந்து வந்தாலும், ஒரு சில தாவரங்கள் தானாக வளரக்கூடியவை. ஆனால் அவை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. சின்னச் சின்ன உடல்நலப் பிரச்னைக்குக்கூட மருத்துவரை அணுகுவதை
வழக்கமாகக் கொண்டுள்ளோம். இருப்பினும், எளிமையான முறையில் பெரிய நோய்களைக் கூட குணப்படுத்தக்கூடிய பல மூலிகைகள் நம் வீட்டின் அருகிலேயே இருக்கலாம். அத்தகைய விலைமதிப்பற்ற மருத்துவ மூலிகைகளில் ஒன்று ‘கீழாநெல்லி’. இந்த பதிவில் கீழாநெல்லி சாப்பிடுவதன் மருத்துவ நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

*இது மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது. மஞ்சள் காமாலைக்கான சிறந்த சிகிச்சைகளில் ஒன்று கீழாநெல்லி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

*இது சிறுநீர் எரிச்சலை போக்குகிறது.

*இது தொற்று மற்றும் நோய்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

*கீழாநெல்லி கடுமையான மற்றும் நீடித்த தலைவலியை குணமாக்கும்.

*கல்லீரல் தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

*சிரங்கு, தோல் புண்கள் போன்ற தொற்று நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

*இது வெப்பத்தால் ஏற்படும் புண்கள் மற்றும் வீக்கத்தை குணப்படுத்துகிறது.

*இது இரத்த சோகையை குணப்படுத்துகிறது.

*இது கல்லீரல் சிதைவைத் தடுக்கிறது.

*இது மலட்டுத்தன்மையை குணப்படுத்தும்.

*கீழாநெல்லிக்கு சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

*இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

*இது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 261

0

0