நெய்யுடன் இந்த பொருளை ஒரு மாதம் சாப்பிட்டு வர நாள்பட்ட மலச்சிக்கல் கூட குணமாகுமாம்!!!

Author: Hemalatha Ramkumar
16 May 2023, 5:18 pm
Quick Share

நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது மலச்சிக்கலை அனுபவித்து இருப்போம். இது கர்ப்பம், அல்லது குறைந்த நார்ச்சத்து உணவு, அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் அல்லது புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக ஏற்படலாம். மலச்சிக்கலை போக்க உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நெய்.

நெய் என்பது நம் உடலில் ஒரு லூப்ரிகண்ட் போல செயல்படுகிறது . நம் உடலில் உள்ள நொதிகள் நெய்யால் சுத்தப்படுத்தப்படுகிறது. நெய் நமது குடல் அமைப்பை மேம்படுத்துகிறது, கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து நம்மை விடுவிக்க உதவுகிறது. எடை இழப்புக்கு பசு நெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

200 மில்லி தண்ணீரை சூடாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி நெய்யை கரைக்கவும். வெதுவெதுப்பான நீர் நெய்யில் உள்ள கொழுப்பை உடைக்க உதவுகிறது. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

எழுந்தவுடன்
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது
மற்றும் நாள் முழுவதும் வழக்கமாக உட்கொள்வது நல்லது.

தூங்கும் முன் சூடான பால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி நெய்யை கலந்து பருகுவது மலச்சிக்கலை நீக்குகிறது.

நாள்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல பலன் பெற குறைந்தபட்சம் ஒரு மாதமாவது உணவில் நெய் சேர்த்து சாப்பிட வேண்டும் அல்லது வெதுவெதுப்பான நீர் அல்லது சூடான பாலுடன் நெய்யை சாப்பிடத் தொடங்க வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகும் மலச்சிக்கல் உங்களைத் தொந்தரவு செய்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மலச்சிக்கலுக்கு நெய்யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கலை போக்க ஒருவர் யோகா மற்றும் பிற உடற்பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 466

0

0