சிறுநீர் கற்களை வலியின்றி வெளியேற்றும் ஆரஞ்சு பழச்சாறு!!!

Author: Hemalatha Ramkumar
29 April 2023, 7:49 pm
Quick Share

தினமும் ஃபிரஷான ஆரஞ்சு சாறு குடிப்பது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆரஞ்சுப்பழத்தில் ஏராளமான வைட்டமின் C மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் இருப்பதால் இது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமும் ஆரஞ்சு சாறு பருகுவது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். ஆரஞ்சு சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருட்கள், ஃபிளாவனாய்டுகள், ஹெஸ்பெரிடின் மற்றும் நரிங்கெனின் போன்ற கலவைகள் உடல் உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

ஆரஞ்சு சாறு வைட்டமின் C யின் சிறந்த ஆதாரம். வைட்டமின் C உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது மற்றும் பல தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரஞ்சு சாற்றை வழக்கமான முறையில் பருகுவது சிறுநீரக கற்கள் வெளியேறுவதற்கு உதவுகிறது.

இது கரு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஃபோலேட்டையும் கொண்டுள்ளது. ஆரஞ்சு ஜூஸில் அதிக அளவு பொட்டாசியம் சிட்ரேட் உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு நார்ச்சத்து நிறைந்தது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் வைட்டமின் B9 மற்றும் ஃபோலேட்டால் நிரம்பியுள்ளது, இரத்த ஓட்டம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

இதனால், இது இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் மற்றும் இரத்த நாளங்களின் உள் புறத்தை மேம்படுத்த முடியும். ஆரஞ்சில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 324

0

0